![](http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/thekkady.jpg)
வனவிலங்கு சரணாலயம்:
எழில் கொஞ்சும் தேக்கடியில்
![](http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/thekkady2.jpg)
யானை சவாரி:
யானை மீதேறி சவாரி செய்வது பெரியவர்களைக் கூட குழந்தைகள் போல குஷிப்படுத்தி விடும். இதை தேக்கடியில் நேரில் காணலாம். ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து காட்டின் அழகை ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு அரை மணிநேரம் என்ற கணக்கில் இங்கு யானை சவாரி நடத்தப்படுகிறது.
குமுளி:
![](http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/thekkady1.jpg)
தேக்கடி காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் நகரம் குமுளி. இந்தப்பகுதியின் ஷாப்பிங் சென்டராக திகழ்ந்து வருகிறது. காட்டில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை இங்கே விற்பனை செய்கிறார்கள்.
மங்களாதேவி கோவில்:
மிகப்பழமையான மங்களா தேவி கோவில் தேக்கடியில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கேரளத்தின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1337மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் பகுதியில் இருந்து பார்த்தால் காட்டின் அழகை கண்குளிர ரசிக்கலாம்.
முல்லைப் பெரியாறு அணை:
தமிழக- கேரள அரசியலில் அவ்வப்போது புயலைக் கிளப்பி வரும் முல்லைப்பெரியாறு அணை இங்குதான் அமைந்துள்ளது. ஆங்கிலேயரால் 1895ம் ஆண்டில் பெரியாற்றின் இந்த அணை கட்டப்பட்டது. கேரளப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.
இதே போல தேக்கடியில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பச்சை வெல்வெட் துணியை போர்த்தியதைப் போல புற்களால் போர்த்தப்பட்டிருக்கும் புல்லுமேடு, டிரைபல் ஹெரிடேஜ் மியூசியம் போன்ற இடங்களும் பார்க்கத் தகுந்தவையே. தேக்கடியில் வனத்துறையால் நடத்தப்படும் ட்ரெக்கிங்கும் பிரபலம்.
இயற்கையுடன் சில நாட்கள் இணைந்திருக்க நினைப்பவர்கள் தேக்கடியை தேர்ந்தெடுக்கலாம்
No comments:
Post a Comment