Tuesday 22 April 2008

உயிரினப் பாதுகாப்பில் கட்டுமானத்தில் அதிக சாதனைகள் பெற்ற சீனாவின் ஹய்னான் மாநிலம் (ஆ)


கிராமப்புறங்களின் உயிரின வாழ்க்கைச்சூழலும் வசிப்பிடங்களின் நிலையும்ம் படிப்படியாக மேம்பட்டு வருகின்றன. 2007ம் ஆண்டின் இறதி வரை, ஹய்னான் மாநிலத்தில் 7 ஆயிரத்துக்கு மேலான, உயிரின வாழ்க்கைச் சூழல் நாகரிக கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சங் மாய் மாவட்டத்தின்சிங் குவிய் கிராமம், அவைகளில் ஒன்றாகும். அங்குள்ள அடர்ந்து வளரும் மரங்கள், தூய்மையான காற்று, நேர்த்தியான தோற்றம் ஆகியவை, பல நகரவாசிகள் அங்கு சுற்றுலா செய்யுமாறு கவர்ந்திழுக்கின்றன. விவசாயிகள், குடும்பத்தில் தங்கு விடுதிகளையும் உணவங்களையும் நடத்துகின்றனர்.

அரசின் ஆதரவுடன், அடிப்படை வசதிகளின் கட்டுமானத்திலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும், சிங் குவிய்கிராம அரசு, 6 இலட்சம் யுவான் நிதியை ஒதுக்கியுள்ளது. சுற்றுச்சூழல் சீராகி, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி, விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது என்று இக்கிராமத்தின் விவசாயை Wanglifen அம்மையார் கூறினார்.

பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணியர்கள் மிக அதிகம். நாகரிகமான உயிரினச் வாழ்க்கை சுற்றுச் சூழல் கிராமங்களைப் பார்வையிட்டு, தனிச்சிறப்பு வாய்ந்த கடல் சார் உணவுகளைச் சாப்பிட்டு, எங்கள் வாழக்கையை அறிந்து கொள்கின்றனர். இது, எங்களுக்கு அதிக நலன்களைக் கொண்டு வருகிறது. உயிரின சூழல் கிராமங்களைக் கட்டியமைத்த பின், முன்பை விட, எங்கள் வாழக்கைத் தரம் மேலும் நன்றாகியுள்ளது. சுற்றுச்சூழலும் சீராகியுள்ளது என்றார் அவர்.

சுற்றுலாத் தொழில், ஹய்னான் மாநிலத்தின் முக்கிய தொழிலாகும். உயிரின வாழ்க்கைச் சூழல்சுற்றுச்சூழல், ஹய்னான் சுற்றுலா தொழில் வளர்வதன் அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் உள்ளது என்று ஹய்னானின் சுற்றுலா பணியகத்தின் தலைவர்சாங் ச்சி கருதுகிறார்.

உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல், சர்வதேச சுற்றுலா துறையில், மிகப் பெரிய போட்டி திறன் உடையது. நாங்கள், மாசுபடாத சுற்றுலா வகைகளை உருவாக்கி வருகிறோம். எடுத்துக்காட்டாக, வெப்ப மண்டல காட்டு பயணம், கடல் பயணம், ஆய்வுப் பயணம், வெந்நீர் ஊற்று பயணம் முதலியவை, இயற்கையான சுற்றுலா வகைகளாகும். கடல் மாசுபட்டால், யாரும் ஹய்னானுக்கு வர மாட்டார்கள். அதனால் நாங்கள் முழு மூச்சுடன் இங்குள்ள உயிரின பாதுகாப்பில் முழு மூச்சுடன் பங்கேற்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஹய்னான் தொழில் நிறுவனங்களின் பொதுக் கருத்தமாக மாறியுள்ளது. கடல் பாதுகாப்புக்கான நீல பட்டு நாடா நடவடிக்கை என்ற முன்மொழிவை சில ஒட்டல்கள் முன்வைத்தன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், கடலோரப் பகுதியிலான குப்பைகளை ஒட்டல்களுக்கு கொண்டு சென்று கையாள வேண்டுமென்றும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டுமென்றும் பயணியர்களை இந்த ஒட்டல்கள் கோருகின்றன.

இயற்கை பாதுகாப்புப் பிரதேசங்கள், உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல் செயல்திறன் மண்டலம், முக்கிய நீர் தோற்றுவாய் கடல் பரப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் நிர்வாகத்தையும், ஹய்னான் மாநிலம் தொடர்ந்து வலுப்படுத்தும். காட்டு பரவல் விகிதத்தை மேலும் உயர்த்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலான ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று ஹய்னான் மாநிலத்தின் திட்டங்கள் வெளிப்படுத்தின.

நேயர்கள், இது வரை, உயிரின பாதுகாப்பில் அதிக சாதனைகள் பெற்ற சீனாவின் ஹய்னான் மாநிலம் பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

1 comment:

ttpian said...

everything is right-why china is going against tamil community?